திருமண வைபவங்கள், ஒன்றுகூடல்களுக்கு தடை!!
இலங்கையில் இன்று (15) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் மறு அறிவித்தல் வரை வீடுகளில் அல்லது மண்டபங்களில் திருமண வைபவங்களை நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
உணவகங்களின் கொள்ளளவில் 50 வீதத்துக்கு உட்பட்டவர்களே இருக்க முடியும் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.
Leave a comment