தலிபான்களை அங்கீகரிக்கமாட்டோம்! – கனடா பிரதமர்
ஆப்கானிஸ்தான் அரசாக தலிபான்களை அங்கீகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என கனடா பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆப்கான் அரசைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சர்வதேச சமூகம் தம்மை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோ, “ஆப்கானிஸ்தான் அரசாக தலிபான்களை அங்கீகரிக்கும் திட்டம் எமக்கு இல்லை. கனடாவின் சட்டதிட்டங்கள்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பினரே. அவர்கள் தற்போது வன்முறையின் மூலமே அரசை கைப்பற்றியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.