IMG 5141
செய்திகள்இலங்கை

செஞ்சோலை நினைவேந்தலுக்கு இராணுவத்தினர் தடை!!

Share

செஞ்சோலை நினைவேந்தலுக்கு இராணுவத்தினர் தடை!!

முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு விமானப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்த சிறார்களை நினைவுகூரச் சென்ற பெற்றோர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு இதேநாள் இலங்கை விமானப் படை நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், செஞ்சோலை வளாகத்துக்குச் சென்ற பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வள்ளிபுனம் இடைக்கட்டு வீதி முழுவதும் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

பூக்கள், மாலைகளோடு அஞ்சலி செலுத்த வந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் திருப்பி்ச் சென்றுள்ளனர். அந்த வீதியால் செல்பவர்கள் பொலிஸார், இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...