1600855043 Prof Tissa Vitharana appointed COPA chairman B
செய்திகள்இலங்கை

சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்க! – பேராசிரியர் திஸ்ஸ விதாரன அறிவிப்பு!

Share

சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்க! – பேராசிரியர் திஸ்ஸ விதாரன அறிவிப்பு!

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் உரிய நேரத்தில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது. நாட்டு மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை இயலுமான அளவுக்கு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை.

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தற்போது மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர் கடந்த காலங்களிலும் மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் அது முழுமையாக சாத்தியப்படவில்லை – என்றார்.

மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் கொவிட் -19 வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டார்கள். ஏப்ரல் மாதம் சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்தாமலிருந்திருந்தால் தற்போதைய நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்காது.

நாட்டை முழுமையாக முடக்கினால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. நாட்டு மக்கள் உயிருடன் இருந்தால் தான் பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என்பதை பலமுறை எடுத்துரைத்துள்ளோம். இருப்பினும் எமது கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...