இலங்கையின் 78-வது சுதந்திர தினமான நாளை (பெப்ரவரி 4), தமிழ் மக்கள் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையைக் குறிக்கும் வகையில் ‘கரிநாளாக’ (Black Day) அனுஷ்டிக்க வேண்டும் எனவும், அதற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று கிளிநொச்சியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது. தமிழ் மக்களுக்கு இன்னும் உண்மையான அரசியல் சுதந்திரம் கிடைக்காத நிலையில், நாளை கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் முன்னெடுக்கும் போராட்டம் மிகவும் பெறுமதியானது. இதற்கு வர்த்தக சங்கங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.
நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம். சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வின் மூலமே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் 7 ஆண்டுகளைத் தாண்டியும் தீர்வு காணப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.