OMugyjDW
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி மற்றும் எஃப்சிஐடியில் ராஜபக்ச குடும்பத்தினர்: ஷிரந்தி மற்றும் நாமல் இன்று முன்னிலை!

Share

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று (03) வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் ‘சிறிலிய சவிய’ (Siriliya) அமைப்பின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 27-ஆம் திகதி அவர் அழைக்கப்படிருந்த போதிலும், மருத்துவக் காரணங்களால் சமூகமளிக்கவில்லை. இதனால் இன்று (பெப். 03) காலை 9:30 மணியளவில் முன்னிலையாகுமாறு மீளவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாமல் ராஜபக்ச திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்புகள் மற்றும் ஏனைய சில குற்றவியல் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் இன்று சிஐடி-யில் ஆஜராகியுள்ளார்.

இந்திய விஜயம் காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்ட திகதியில் அவர் சமூகமளிக்காத நிலையில், இன்று முன்னிலையாகியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...