செய்திகள்இலங்கை

கொவிட் தொற்று புகைப்பிடிப்பவர்களை 14 மடங்கு அதிகம் தாக்கும்!!

Share

கொவிட் தொற்று புகைப்பிடிப்பவர்களை 14 மடங்கு அதிகம் தாக்கும்!!

புகைப்பிடிப்பவர்களுக்கு கொவிட் தொற்றின் தாக்கம் புகைப்பிடிக்காதவர்களிலும் 14 மடங்கு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

செய்தியாளர் சந்திப்பில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

வீட்டிலோ அல்லது வெளியிடம் ஒன்றிலோ புகைப்பிடிப்பவர்களுடன் இருப்பவர்களுக்கு கொவிட் தொற்று தாக்கும் சாத்தியம் அதிகமாகும்.

கொவிட் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் என்பது போன்றே அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களால் மரணம் நேரக்கூடிய சாத்தியமும் அதிகமாகும்.

தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும் புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் பழக்கமுடையவர் என்றால் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும் என சமாதி ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...