20210815 003230
செய்திகள்இலங்கை

கொரோனாவுக்கு காய்ச்சல் தடிமன் மட்டும் அறிகுறி அல்ல!- பொது வைத்திய நிபுணர் விளக்கம்!!

Share

கொரோனாவுக்கு காய்ச்சல் தடிமன் மட்டும் அறிகுறி அல்ல!- பொது வைத்திய நிபுணர் விளக்கம்!!

கொரோனாவுக்கு காய்ச்சல், தடிமன் மாத்திரம் அறிகுறி அல்ல. வயிற்றோட்டம், மூக்கடைப்பு, மூச்சுக் கஷ்டம், மூக்கால் தண்ணி வடிதல், உடல் இயலாமை போன்றவையும் அறிகுறியாகவே கொள்ளப்படும் என பொது வைத்திய நிபுணர் கஜந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் டெல்டா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர் என்று தெரிவித்த அவர் இதுவரை யாழ்ப்பாணத்தில் 176 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார்.

ஒரு வாரத்தில் ஒரு கொரோனா மரணம் ஏற்பட்ட யாழ்ப்பாணத்தில் தற்போது நாள்தோறும் கொரோனா மரணம் ஏற்பட்டு வருகின்றது.

இரண்டு, மூன்று நாள்களுக்கு மேல் அதிகமாக காய்ச்சல் காணப்படல், நீர் அருந்த கஷ்டம், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் வைத்தியசாலையை நாடுவது சிறந்தது.

தடுப்பூசி போட்டால் கொரோனா பரவாது என்பது இல்லை. ஆனால் தடுப்பூசியை செலுத்துவதன் மூலம் தீவிரமாக கொரோனா பரவுகின்ற சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...