uni
செய்திகள்உலகம்சுகாதாரம்

காலநிலை மாற்றம் – ஒரு பில்லியன் சிறுவர்களுக்கு பேராபத்து!

Share

காலநிலை மாற்றம் – ஒரு பில்லியன் சிறுவர்களுக்கு பேராபத்து!

பருவநிலை மாறுதல் உலகெங்கும் சுமார் ஒரு பில்லியன் சிறுவர்களது சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பறித்துவிடப்போகிறது என்று ஐ. நா.சிறுவர் பாதுகாப்பு நிதியம் (Unicef) எச்சரித்துள்ளது.

காலநிலை நெருக்கடியை ஒரு சிறுவர் உரிமைப் பிரச்சினை என்று தொடர்புபடுத்தியிருக்கும் சிறுவர் நிதியம், அதன் விளைவுகள் உலக நாடுகளில் சிறுவர்களை எந்தளவுக்குப் பாதிக்கும் என்ற அளவுச் சுட்டியை வெளியிட்டிருக்கிறது.

பருவநிலையும் சூழல் பாதிப்புகளும் ஏற்படுத்துகின்ற அதிர்ச்சிகள் நேரடியாக சிறுவர்களது வாழ்வுக்கான உரிமைகளையே பாதிக்கின்றன. வெப்பம், புயல், மழை, மாசு என எல்லா வடிவங்களிலும் தோன்றும் சீற்றங்கள் சிறுவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளைத் தடுக்கின்றன-என்று சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

அதி உச்ச அளவில் சிறுவர்கள் பாதிக்கப்படவுள்ள நாடுகளின் தர வரிசையில் முதல் இடங்களில் ஆபிரிக்க நாடுகளான மத்திய ஆபிரிக்கக் குடியரசு, சாட், நைஜீரியா ஆகியவை உள்ளன. அவற்றுக்கு அடுத்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய தென்னாசிய நாடுகளும் அடங்கியுள்ளன.

மிகவும் அதிகளவு காபன் வெளியேற்றுகின்ற நாடுகளில் ஒன்றான இந்தியாவில் சிறுவர்களது எதிர்காலம் மிக ஆபத்தான திசையில் உள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் உலகளாவிய மதிப்பீட்டு ஆய்வுகளின் படி- 240 மில்லியன் சிறுவர்கள் கடற்கரையோர வெள்ளம் காரணமாகவும், 400 மில்லியன் சிறுவர்கள் புயல்கள் காரணமாகவும், 820 மில்லியன் சிறுவர்கள் வெப்ப அனல் வீச்சாலும், 920 மில்லியன் சிறுவர்கள் தண்ணீர் பற்றாக்குறை
காரணமாகவும் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி கிரேட்டா துன்பேர்க்,(Greta Thunberg) காலநிலை பாதிப்புகள் மீது உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெள்ளிக்கிழமைகள் தோறும் பாடசாலைகளைப் பகிஷ்கரிக்கும் இயக்கத்தை கடந்த 2018 இல் ஆரம்பித்திருந்தார்.அந்த இயக்கம் உலகெங்கும் சிறுவர்கள் மற்றும் இளவயதினரிடையே “எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமை”( Friday for future) என்னும் பெயரில் பிரபலமாகிப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளில் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளைப் புறக்கணித்து மேற்கொள்ளப்பட்டு வந்த அந்த இயக்கம் கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுவீடனில் கிரேட்டாவின் மாணவர் இயக்கம் தொடக்கப்பட்டு மூன்றாவது ஆண்டு நிறைவு நாளில் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் இந்த எச்சரிக்கை அறிக்கை வெளியாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...