காபூலில் இருந்து 18,000 பேர் வெளியேற்றம்!!!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த ஐந்து நாள்களில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வௌியேற்றப்பட்டுள்ளனர் என்று நேட்டோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காபூல் நகரை தலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.
காபூல் தலிபான்களால் கைப்பற்றப்பட்டதிலிருந்து வௌிநாட்டு பிரஜைகளும் ஆப்கானியர்களும் அங்கிருந்து வௌியேறி வருகின்றனர்.
நாட்டை விட்டு வௌியேறும் நோக்கில் காபூலில் பலர் ஒன்றுகூடியதால் ஏற்பட்ட நெரிசல் மற்றும் துப்பாக்கிச் சூடு என்பவற்றில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
Leave a comment