puthiyathalaimurai 2024 10
செய்திகள்இந்தியா

கர்ப்பத்தைச் சுமக்க எந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்த முடியாது – இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Share

பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டு 30 வாரங்கள் கர்ப்பமாக இருந்த 18 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவரது கர்ப்பத்தைக் கலைக்க இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர்கள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தப் பெண்ணின் உரிமைகள் குறித்துப் பின்வரும் மிக முக்கியமான கருத்துக்களை முன்வைத்தது.

ஒரு பெண்ணின் உடல் சார்ந்த ஒருமைப்பாடு மற்றும் தனது உடலைப் பற்றிய முடிவுகளை எடுக்கும் ‘இனப்பெருக்கத் தெரிவு’ ஆகிய உரிமைகள் மிகவும் மேலானவை.விருப்பமில்லாத ஒரு கர்ப்பத்தைச் சுமக்கச் சொல்லியோ அல்லது அதனை முழுமைப்படுத்தச் சொல்லியோ எந்தவொரு பெண்ணையும் நீதிமன்றம் ஒருபோதும் கட்டாயப்படுத்த முடியாது.

பிறக்கப்போகும் குழந்தை சட்டபூர்வமற்றது; தாய் அந்தக் குழந்தையைச் சுமக்க விரும்பவில்லை. இத்தகைய சூழலில் தாயின் இனப்பெருக்க தன்னாதிக்கத்திற்கே (Reproductive Autonomy) முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்தியச் சட்டப்படி (MTP Act), பொதுவாக 24 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பத்தைக் கலைக்க வேண்டுமானால் நீதிமன்றத்தின் விசேட அனுமதி அவசியமாகும்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வினால் பாதிக்கப்பட்டிருந்தமையாலும், அந்தக் கருவைச் சுமப்பது அவரது மனநிலை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் என்பதாலும், 30 வாரங்கள் கடந்த நிலையிலும் மருத்துவ ரீதியாகக் கர்ப்பத்தைக் கலைக்க உச்ச நீதிமன்றம் இந்த விசேட அனுமதியை வழங்கியது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...