z p01 SJB
செய்திகள்அரசியல்இலங்கை

இராணுவத்தின் தியாகத்தை பேசத் துணிவில்லாத அரசு வெட்கப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் ஹெக்டர் அப்புஹாமி சாடல்!

Share

இலங்கை அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் இராணுவத்தின் கௌரவத்தையும் புறக்கணிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முறையான வீடுகளைக் கட்டிக்கொடுக்காத அரசாங்கம், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் வீட்டைப் புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுவது வெட்கக்கேடான செயல் என அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர தின விழாவில் கடனுக்கு வாங்கப்பட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்த முடியாது என அரசாங்கம் கூறியதை அவர் விமர்சித்தார். இராணுவத்தினர் தமது யுத்த உபகரணங்களுடன் கம்பீரமாக ஊர்வலம் வரும்போதுதான் அவர்களுக்கு உண்மையான அபிமானம் (பெருமிதம்) கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று நாம் இந்த நாற்காலிகளில் அமர்ந்திருப்பதற்கு இராணுவத்தினர் செய்த பெரும் தியாகங்களே காரணம். அவர்களது தியாகத்தைப் பற்றிப் பேசத் தைரியமில்லாத இந்த அரசாங்கம் வெட்கமடைய வேண்டும் என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து இந்தியக் கடற்படையினர் நமது நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள போதிலும், அரசாங்கம் இதுவரை அதற்கு எதிராக எந்தவிதமான இராஜதந்திர நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் கண்டனம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், பிரிவினைவாத சக்திகளுக்குச் சாதகமாகச் செயல்படுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் ஹெக்டர் அப்புஹாமி வலியுறுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...