கரைச்சி பிரதேச சபைத் தவிசாளருக்கும் கொரோனாத் தொற்று!!

VelanPressmeet 3

கரைச்சி பிரதேச சபைத் தவிசாளருக்கும் கொரோனாத் தொற்று!!

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதன் தொடராக அவருடன் தொடர்பிலிருந்த செய்தியாளர் ஒருவருக்கு அன்டிஜென் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இன்று தவிசாளரும் அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version