Development officers protest
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஐந்தாவது நாளாகத் தொடரும் சாகும் வரையிலான உண்ணாவிரதம்: உடல்நிலை பாதிக்கப்பட்ட மற்றுமொரு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!

Share

தங்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தைச் சேர்ந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று (30) உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தங்களை, ஆசிரியர் சேவைக்குள் உடனடியாக உள்வாங்குமாறு வலியுறுத்தி இந்த உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி 26 ஆம் திகதி சத்தியாக்கிரகமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், அதிகாரிகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காததால் அன்றே ‘சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக’ மாற்றப்பட்டது.

இன்று இந்தப் போராட்டம் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நால்வரில் இதுவரை மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் உத்தியோகத்தர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

எஞ்சியிருந்த இருவரில் ஒருவரின் உடல்நிலை இன்று காலை மோசமடைந்ததை அடுத்து, அவர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஒரு உத்தியோகத்தர் மாத்திரம் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசாங்கம் இது குறித்து இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...