MediaFile 11 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம்: உள்ளூர் முகவர் நிறுவன இயக்குநர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை!

Share

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பிடித்து பாரிய சுற்றாடல் அழிவை ஏற்படுத்திய ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ (X-Press Pearl) கப்பலின் உள்நாட்டுப் பிரதிநிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள், இன்று (26) உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் வெளியானது.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆகியவற்றால் முறையான தடை உத்தரவுகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவித்தார்.

அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான தீர்ப்புகள் எந்த அளவிற்குச் சரியாக அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பரிசீலிப்பதற்காகவே இன்றைய தினம் இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டன.

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் 2021 இல் தீப்பற்றியதில், பில்லியன் கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் நச்சு இரசாயனங்கள் கடலில் கலந்தன. இது இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான கடல்சார் சுற்றாடல் பேரழிவாகக் கருதப்படுகிறது. இதற்கான இழப்பீடு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த சட்ட நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

 

 

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...