download 4
செய்திகள்இலங்கை

ஊரடங்கை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பு!!

Share

ஊரடங்கை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பு!!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் சிறப்புச் சந்திப்பில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மேலும், இதுவரை கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செப்ரெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் இவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதேச செயலாளர், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கிராமப்புற கொரோனாக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் என்பவை இணைந்து தடுப்பூசி ஏற்றாதவர்களை அடையாளம் கண்டு, தடுப்பூசிக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதிக்கு முன்னர் சுகாதாரப் பிரிவுக்கு அறிக்கை வழங்க பணிக்கப்பட்டுள்ளது.

1906 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது தேசிய கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணிக்கு அழைப்பதன் மூலமும் தடுப்பூசி பற்றுக்கொள்வதற்கு பதிவுசெய்ய முடியும்.

இந்தத் தடுப்பூசித் திட்டத்தை இராணுவத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின் படி மேற்கொள்வது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...