2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology) பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 பரீட்சை நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர்கள் ஊடாக அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தனியார் விண்ணப்பதாரர்கள் இவர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் ஏற்கனவே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தபால் மூலம் அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், இன்று முதல் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக அவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.