richar 1
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் – ரிஷாத் மறியல் நீடிப்பு!!

Share

ஈஸ்டர் தாக்குதல் – ரிஷாத் மறியல் நீடிப்பு!!

2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்  தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே இன்று காலை இந்த உத்தரவை பிறப்பித்தார்.

செப்டம்பர் 1 ஆம் திகதி வரை அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையின் உரிமையாளருடன், ரிஷாத் பதியுதீன் தொடர்புகொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்  காரணமாக ரிஷாத் பதியுதீன் கைதானமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...