MediaFile 3 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் பாரிய வளர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் $5 பில்லியன் வருமானம் ஈட்டி சாதனை!

Share

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.
ஆடை சங்கங்களின் சம்மேளனம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளுக்கு அமைய இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானமானது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு பிரதானமாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்த கேள்வியின் அதிகரிப்பே காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் கேள்வி அதிகரிப்புடன் டிசம்பர் மாதத்தில் அதிக லாபத்தைப் பெற்றுக்கொள்ள இலங்கையினால் முடிந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது.

இந்தநிலையில், 024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 6.49 வீதத்தினால் அதிகரித்துள்ளதுடன் அது 178.29 மில்லியன் டொலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் 6.76 வீதத்தினால் வளர்ச்சியடைந்து 141 மில்லியன் டொலர்களாகவும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதிகள் 12.95 வீத்தினால் அதிகரித்து 55.12 மில்லியன் டொலர் வருமானமாகவும் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில், ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் 4.06 வீதத்தால் குறைவடைந்துள்ளதுடன் அது 72.8 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முழு ஆண்டு காலப்பகுதியில், மொத்த ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி 5.02 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது 2024 இல் 4.76 பில்லியன் டொலர்களாக இருந்ததுடன் ஒட்டுமொத்தமாக 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி 5.42 வீதம் வரை அதிகரித்துள்ளதுடன் அது 258.18 மில்லியன் டொலர் அதிகரிப்பாகும் என மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...