1770083058 ELECTRICITY 6
செய்திகள்இலங்கை

இந்த மாத இறுதியில் இலங்கை மின்சார சபை கலைப்பு? மறுசீரமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில்!

Share

இலங்கை மின்சார சபையை (CEB) மறுசீரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் தற்போது அதன் இறுதி இலக்கை எட்டியுள்ளது. இதன்படி, இந்த மாத இறுதிக்குள் மின்சார சபையைக் கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

மின்சார சபை மாற்றத்திற்கான செயலணியின் தலைவர் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளபடி, 5 கட்டங்களாகத் திட்டமிடப்பட்ட இந்த மறுசீரமைப்பில் ஏற்கனவே 4 கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன:

தற்போது மிக முக்கியமான இறுதிக்கட்டமான தேசிய மின்சாரக் கொள்கை மற்றும் தேசிய மின்சாரக் கட்டணக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை பெப்ரவரி மூன்றாவது வாரத்திற்குள் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி அறிவிக்கப்படும்.

ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு (VRS):
மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2,173 ஊழியர்கள் விண்ணப்பித்திருந்தனர்.இதில் 20 பேர் தமது விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.தற்போது 2,153 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீடு: ஓய்வு பெறும் இவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...