800
செய்திகள்இலங்கை

அபாயத்தை உணராது பொதுமக்கள் செயற்படுகின்றனர்! – மருத்துவர் நிமால் அருமைநாதன் எச்சரிக்கை!!

Share

அபாயத்தை உணராது பொதுமக்கள் செயற்படுகின்றனர்! – மருத்துவர் நிமால் அருமைநாதன் எச்சரிக்கை!!

நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இந்த நெருக்கடியை உணர்ந்துகொண்டு செயற்பட தவறின் பேரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் எச்சரித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது நோயாளி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அடையாளம் காணப்பட்டார். முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம்வரை ஆயிரத்து 400 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

IMG 20210805 WA0003 1 e1628749325429அவர்களில் 14 கர்ப்பிணித் தாய்மார்கள், 10 வயதுக்குட்பட்ட 52 சிறுவர்கள் அடங்குகின்றனர். மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால் பெரும்பாலான பொதுமக்கள் எவ்வித சமூகப் பொறுப்பும் இன்றி சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது நடமாடித் திரிவதனை அவதானிக்க முடிகிறது. பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காதுவிடின் தொற்று பரவும் வேகம் மிகவும் அதிகரிக்கும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். இதனை அனைத்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார வளங்களைக் கொண்டுள்ள கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்த மருத்துவ வளங்கள் அனைத்தும் அங்கு திசை திருப்பபடுகின்றபோது ஏனைய நோய்கள், சிகிச்சைகளை கவனிக்க முடியாது போய்விடும். இதனால் அதிகளவு பாதிப்புக்கள் மற்றும் பேரிழப்புக்கள் ஏற்படும்.

பொதுமக்கள் இந்த நெருக்கடிகளை புரிந்துகொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று மருத்துவர் நிமால் அருமைநாதன் வலியுறுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...