அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை; சில இடங்களில் 50 மி.மீ-க்கு மேல் வீழ்ச்சி!

1636589088 Weather beach 2

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் பல்வேறு மாகாணங்களில் அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ-க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

Exit mobile version