மகா ஓயாவில் பொலிஸார் மீது தாக்குதல்: போதைப்பொருள் சோதனையின் போது நடந்த வன்முறை – நால்வர் கைது!

26 697af73ee5400

போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்களை மகா ஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்வலயாய பகுதியில் நேற்று மாலை (31) மகா ஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று போதைப்பொருள் சுற்றிவளைப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தது.

இதன்போது அங்கிருந்த ஒரு குழுவினர், கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் உடனடியாக மகா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தடியொன்றுடன் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தெஹியத்தகண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மகா ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version