upul rohana
செய்திகள்இலங்கை

நாட்டை உடன் முடக்குங்கள்! – சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து

Share

நாட்டை உடன் முடக்குங்கள்! – சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து

நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில், இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும். இவ்வாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கொரோனாத் தொற்று வேகம் தற்போது அதிகரித்துச் செல்கிறது. இதனால் தொற்றாளர்களால் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் நிரம்பியுள்ளன.

தற்போது நாட்டில் கொரோனாத் தொற்றால் அதிகமானோர் இறக்கின்றனர். இதற்கு டெல்ரா பரவல் அதிகரித்துள்ளமையே காரணமாகும். தொற்றுக்குள்ளாவோரின் தொகை குறைக்கப்பட வேண்டுமெனில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதுடன், கொரோனா கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் நாளாந்தம் தொற்றுக்குள்ளாகி இறப்போரின் எண்ணிக்கை 150ஐ தாண்டும். அதேபோல தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இவற்றைக் கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு விரைவான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். நாட்டை முழுமையாக இரண்டு வாரங்களுக்காவது முடக்கினால் தொற்றுப் பரவலைக் குறைக்க முடியும். தற்போது எம்முன் வைரஸால் இறப்பதா அல்லது பட்டனியால் உயிரிழப்பதா என்கிற இரு சவால்களே உள்ளன – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...