துப்பாக்கி உரிமம் வைத்திருப்போருக்குப் பாதுகாப்பு அமைச்சின் இறுதி எச்சரிக்கை: நாளைக்குள் புதுப்பிக்கத் தவறினால் அபராதம்!

image d72f4bf3a7

துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், 2026 ஆம் ஆண்டிற்காகத் தமது உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான காலக்கெடு நாளை (ஜனவரி 31) உடன் நிறைவடைவதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இறுதித் திகதி: 2026 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களை எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி புதுப்பிப்பதற்கான கடைசி நாள் நாளை ஜனவரி 31 ஆகும்.

நாளைக்குள் புதுப்பிக்கத் தவறுபவர்கள், துப்பாக்கிச் சட்டக் கட்டளையின் 22 ஆவது பிரிவின் கீழ் அபராதத் தொகையைச் செலுத்தி, பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் அத்தியாவசியமாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

பெப்ரவரி 10 ஆம் திகதிக்குப் பின்னரும் உரிமத்தைப் புதுப்பிக்காத நபர்களுக்கு எதிராகப் பாதுகாப்பு அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்லுபடியாகும் உரிமமின்றி சட்டவிரோதமாகத் துப்பாக்கியைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிய உரிமமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர் கைது செய்யப்படுவதுடன், துப்பாக்கிகளும் அரசால் பறிமுதல் செய்யப்படும்.

தேவையற்ற சட்டச் சிக்கல்கள் மற்றும் அபராதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, உரிமம் வைத்திருப்போர் உடனடியாகத் தமது அருகிலுள்ள மாவட்ட செயலகங்கள் அல்லது உரிய அதிகாரிகளிடம் சென்று உரிமங்களைப் புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Exit mobile version