சாதாரண தரப் பரீட்சை: மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 11ஆம் திகதி முதல் தடை!

MediaFile 2025 03 07T111221.784

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பரீட்சார்த்திகளுக்குச் சாதகமான சூழலை உறுதிப்படுத்தும் வகையில் பரீட்சைகள் திணைக்களம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை (பெப்ரவரி 26 வரை) இந்தத் தடை அமுலில் இருக்கும்.

இம்முறை நாடளாவிய ரீதியில் 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. பரீட்சை சட்டங்களை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

 

 

 

Exit mobile version