கட்டுநாயக்கவில் 24 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்: அக்குரணை தொழிலதிபர் கைது!

1531458896 indian sri lankan 2

இந்தியாவின் பெங்களூருவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த தொழிலதிபர் ஒருவர், சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களைக் கொண்டு வந்த குற்றச்சாட்டில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, அக்குரணைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது பயணப் பொதிகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 48,900 யூரோ (EUR), 14,000 அமெரிக்க டொலர் (US$), 26,650 இந்திய ரூபாய் (INR) நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன:

கைப்பற்றப்பட்ட மொத்த நாணயங்களின் இலங்கை ரூபா பெறுமதி சுமார் 24.09 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூருவிலிருந்து இவ்வளவு பெரிய தொகையிலான நாணயங்களை அவர் கொண்டு வந்ததற்கான நோக்கம் குறித்துக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version