எண்ணெய் கலப்படம் குறித்து நுகர்வோர் அமைப்பு எச்சரிக்கை.

1769706147 oil 6

நாட்டின் தேங்காய் உற்பத்தியை பாரிய அளவில் அதிகரிப்பதற்கான விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஆண்டு தேங்காய் அறுவடையை 4,200 மில்லியனாக உயர்த்துவதே தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான இலக்காகும்.

தற்போதைய காலம் தென்னைச் செய்கைத்துறைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

தேங்காய் உற்பத்தி அதிகரிப்பு ஒருபுறம் இருக்க, சந்தையில் தேங்காய் எண்ணெய் தொடர்பான சில அபாயகரமான போக்குகள் குறித்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது:

எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை அதிகரிப்பு காரணமாக, தூய தேங்காய் எண்ணெயுடன் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஏனைய எண்ணெய் வகைகளைக் கலந்து விற்பனை செய்யும் நிலை உருவாகலாம்.

சந்தையில் பாம் எண்ணெய் (Palm Oil) மற்றும் தரம் குறைந்த ஏனைய எண்ணெய்களின் புழக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால் நுகர்வோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

Exit mobile version