எலபாத்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட கானதோல பகுதியில் நேற்று (06) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 11 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கானதோல – இலுக்குதென்ன வீதியின் 79-ஆம் இலக்க ரப்பர் தோட்டத்திற்கு அருகில், மாணவி வீதியோரமாகச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லொறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவி அலகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டதா என்பது குறித்து எலபாத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.