Untitled 1 10 scaled
சினிமாபொழுதுபோக்கு

லெட்டர் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறிய விஜய்

Share

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக வலம் வருபவர் தான் விஜய். இவர் சினிமாவில் அறிமுகமாகிய புதிதில் சந்திக்காத அவமானங்களே இல்லை எனலாம்.இருப்பினும் தன்னுடைய விடா முயற்சியினால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்பொழுது லியோ என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது என்னை போன்றே என் மகனுக்கும் அர்த்தமுள்ள பிடிவாதம் உண்டு. அந்த பிடிவாதத்தால் தான் என் மகன் இன்று இந்த இடத்தில் இருக்கிறார். 1992ம் ஆண்டு நான் நடிகனாக வேண்டும் என விஜய் என்னிடம் கூறினார்.

நான் முடியாது என்றேன். வேறு ஏதாவது ஆகு. டாக்டராகு, நான் உனக்கு மருத்துவமனை கட்டித் தருகிறேன் என்றேன் என்றார்.நான் சொன்னதை கேட்டிருந்தால் அவர் ஒரு டாக்டராகவோ, என்ஜினியராகவோ ஆகி மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம் வாங்கி அப்படியே காலத்தை ஓட்டியிருக்கலாம். அதை பண்ணாமல் பிடிவாதமாக, ஒரு விதத்தில் அவர் அன்று எங்களை மிரட்டினார். சின்னதா ஒரு லெட்டர் எழுதி டைனிங் டேபிளில் வைத்துவிட்டு வீட்டை விட்டு போய்விட்டார்.

நானும், ஷோபாவும் நாள் முழுவதும் அவரை தேடினோம். ஒரே பிள்ளை, எப்படி இருக்கும். அவர் பாட்டுக்கு என்னை தேடாதீர்கள் என்று ஒரு லைன் எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார் என எஸ்.ஏ.சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.நாள் முழுக்க விஜய்யை தேடி அலைந்தோம். கடைசியில் அவர் உதயம் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என நியூஸ் வந்தது. போயி, அங்கிருந்து கூட்டிட்டு வந்தோம். அந்த வைராக்கியம் தான். எங்களை மிரட்டினாரோ, பயமுறுத்தினாரோ ஏதோ ஒன்று.

அந்த வைராக்கியம் இல்லாமல் இருந்திருந்தால் இன்று இருக்கும் விஜய்யை உங்களால் பார்த்திருக்க முடியாது. அந்த வைராக்கியம் தான் இளைஞர்களுக்கு வேண்டும் என்கிறேன் என எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.ஒரு பிரபல இயக்குநரின் மகனாக இருந்துமே நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...