10 40
சினிமாபொழுதுபோக்கு

டிராகன் படத்தின் வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பாளர் அர்ச்சனா

Share

டிராகன் படத்தின் வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பாளர் அர்ச்சனா

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். கடந்த வாரம் வெளிவந்த இப்படம் வெற்றிகரமாக மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

லவ் டுடே படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து ஏஜிஎஸ் எடுத்த இரண்டாவது திரைப்படமாகும் டிராகன். லவ் டுடே எப்படி உலகளவில் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்ததோ, அதே போல் இப்படமும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதே போல் தற்போது வசூல் வேட்டையில் டிராகன் படம் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், மூன்று நாட்களில் இப்படம் எந்தந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதில் தமிழ்நாட்டில் ரூ. 24.9 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் கேரளா, கர்நாடாகா, வட மாநிலங்களில் ரூ. 4.37 கோடி வசூல் செய்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 6.25 கோடி வசூலையும், வெளிநாட்டில் ரூ. 14.7 கோடி வசூலையும் இப்படம் ஈட்டியுள்ளது.

இதன்மூலம் உலகளவில் ரூ. 50.22 கோடி வசூல் டிராகன் படம் மூன்று நாட்களில் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...