tamilni 294 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்

Share

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்

தே.மு.தி.க தலைவரும் தென்னிந்திய தமிழ் நடிகருமான விஜயகாந்த் திடீரென சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்திற்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மருத்துவ சிகிச்சைகளை நிறைவுசெய்து, இன்னும் ஒரீரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானதை அடுத்து , அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக பேச்சில் மாத்திரமல்லாமல், உடல் ரீதியாகவும் தளர்வடைந்துள்ள விஜயகாந்த், பொதுநிகழ்வுகளில் அரிதாகவே பங்கேற்றுவருகின்றார். எழுந்து நடக்க முடியாத ஒருவராக இருக்கும் அவரை, மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கான விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் ஆகியோரே கவனித்துவருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க யாருடன் கூட்டணி அமைக்கும் என விஜயகாந்தே அறிவிப்பார் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அவரது ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனினும் விஜயகாந்தின் உடல்நிலை பற்றி தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் அவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தே.மு.தி.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...