tamilnaadi 112 scaled
சினிமாபொழுதுபோக்கு

சிலருடன் தவறான உறவில் இருந்த நடிகை .. முன்னாள் கணவர் பகிர் தகவல்

Share

நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர் தான் நடிகர் மோகன் ஷர்மா. இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் நடித்துள்ளனர். பின் திருமணமும் ஆனது, ஆனால் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில், தங்களுக்குள் எப்படி உறவு ஏற்பட்டது, ஏன் விவாகரத்து ஆனது என்பது குறித்து பேட்டி ஒன்றில் புட்டுப்புட்டு வைத்துள்ளார் நடிகர் மோகன் ஷர்மா.

இதில் “நான் மும்பையில் தான் வசித்து வந்தேன். படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே இங்கு வருவேன். இந்த நிலையில், ஒரு நாள் லக்ஸ் விளம்பரத்தில் நடிக்க நடிகை லட்சுமி மும்பை வந்திருந்தார்”.

“அப்போது எனக்கு போன் செய்து பேசினார். எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் செய்ய வேண்டும், உங்களால் எனக்கு உதவ முடியுமா என கேட்டார். இதன்பின், நானும் லட்சுமியின் ஷாப்பிங் சென்றோம். அப்போது, ஷேவிங் செய்த பிறகு பயன்படுத்தக்கூடிய லோஷன் ஒன்றை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன்”.

“அதன் விலை அப்போதே ரூ. 500. அந்த லோஷன் நாய் வடிவத்தில் உள்ள பாட்டிலில் இருக்கும். அதுவே அதற்க்கு அழகு. ஆனால், நான் அந்த லோஷனை வாங்கவில்லை”.

“ஷாப்பிங் முடித்துவிட்டு ஹோட்டலுக்கு வந்து இறங்கிய போது, நான் ஆசைப்பட்டு பார்த்துக்கொண்டிருந்த லோஷனை லட்சுமி என் கையில் கொடுத்து, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்றார். நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தால், இந்த நாய் போல் உங்களது வாழ்க்கையில் நானும் இருப்பேன் என கூறினார்”.

“லட்சமி என்னை பார்த்து இப்படி கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. காரணம் நான் அப்படியான ஒரு விஷயத்தை லட்சுமியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அன்று இரவு எனக்கு சுத்தமாக தூக்கமே இல்லை. உடனடியாக லட்சுமிக்கு போன் கால் செய்தேன். நாளைக்கு மீட் பண்ணனும் என கேட்டேன். அடுத்த நாள் காலையில் அவரை சென்று சந்தித்தேன். அப்போது அவர் எனக்காக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு காத்திருந்தார். இருவரும் சாப்பிட சென்றோம். அப்போது மிகவும் ஓப்பனாக திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக என்னிடம் லட்சமி கூறினார்”.

“அதன்பின் அவர் ஹோட்டல் ரூமிற்கு என்னை அழைத்து சென்றார். அங்கு சென்ற பின், நடக்கப்போவது என்ன என்று என்னால் கணிக்க முடிந்தது. ஆனால் அதற்கு முன் அவரிடம் குங்குமம் கேட்டேன். அவர் நெற்றில் குங்குமம் வைத்துவிட்ட பின், மற்றவை எல்லாம் நடந்தது. அது எங்களுடைய முதல் இரவாகவும் மாறியது”.

“அதன்பின் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்த நிலையில், லட்சுமி சில பேருடன் தவறான உறவில் ஈடுபட்டார். இதற்கிடையே அவரது மகள் ஐஸ்வர்யாவிற்கும், லட்சுமிக்கும் இடையே மோதல் நடந்தது. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா மிகவும் கோபத்தில் இருந்தார். அப்போது லட்சுமி, ஐஸ்வர்யா தனக்கு எதிராக செயல்பட போவதாக கூறி, ஒரு மகளை தந்தெடுத்து கொண்டார். ஆனால், அது தந்தெடுத்த குழந்தை கிடையாது”.

“லட்சுமி என்னிடம் ருக்மணி அம்மாவை தன்னுடைய அம்மா இல்லை என ஒரு முறை கூறியுள்ளார். இந்த பிரச்சனைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, ருக்மணி அம்மா என்னிடம், இனி கடவுளே நினைத்தாலும் லட்சுமி போல் ஒருவரை படைக்க முடியாது என கூறி மிகவும் வருந்தினார். எனக்கும் லட்சமிக்கும் இடையே பிரச்சனைகள் அதிகரித்தது. இருவரும் தனித்தனி பெட்ரூமில் தங்க துவங்கினோம்”.

“நான் ஒருமுறை விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது, மகள் ஐஸ்வர்யா என்னிடம் வந்து, அம்மா யாரிடமுமோ அடிக்கடி பேசி கொண்டிருகிறார் என கூறினார். அதில் மனமுடைந்த நான் அப்படியே அந்த வீட்டில் இருந்து வெளியேறினேன்” என கூறினார்.

நடிகை லட்சமி குறித்து அவரது முன்னாள் கணவர் நடிகருமான மோகன் ஷர்மா கூறிய அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...