11 30
சினிமாபொழுதுபோக்கு

நான் அரசியலுக்கு வந்தால் மக்களுக்காக மட்டுமே வேலை செய்வேன்- ராகவா லாரன்ஸ்..!

Share

நான் அரசியலுக்கு வந்தால் மக்களுக்காக மட்டுமே வேலை செய்வேன்- ராகவா லாரன்ஸ்..!

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, சமூக சேவையிலும் தனக்கென ஓர் அடையாளம் கொண்டு விளங்கும் ராகவா லாரன்ஸ், அரசியலுக்கு வருவதற்கான தன்னுடைய காரணங்களை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில், அவர் அரசியலுக்கு வருவாரா? என்பது குறித்த கேள்விகள் தொடர்ந்தும் எழுந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ் , “நான் அரசியலுக்கு வருவதைப் பற்றி பலர் கேட்கிறார்கள். அரசியல் என்பது அதிகாரத்திற்காக அல்லது பதவிக்காக வரவேண்டிய இடம் அல்ல. அது மக்களுக்கு உதவும் ஒரு சேவைத் துறையாக இருக்க வேண்டும் ” என்று கூறினார்.

அத்துடன் மக்களின் நலனே என் இலக்கு என்ற ராகவா லாரன்ஸ் பல ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுதல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, மருத்துவச் செலவுகளுக்கு உதவுதல் எனப் பல்வேறு வகைகளில் மக்களுக்கு உதவி செய்துவருகிறார். அத்துடன் உழைத்த பணத்தில் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்றார்.

அவரது பேச்சில், “நான் அரசியலுக்கு வந்தால், மக்களுக்காக மட்டுமே வேலை செய்வேன். எத்தனை சவால்கள் வந்தாலும், மக்களுக்கு உதவுவதே என் லட்சியம் என்றதுடன் தன்னலமற்ற சேவையுடன் அரசியலுக்கு வந்தால், அது மக்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும்,” எனத் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...