download 10
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

சரும பராமரிப்பில் முக்கிய பங்காற்றும் உருளைக்கிழங்கு

Share

உருளைக்கிழங்கு ருசியைத் தருவது மட்டுமில்லாமல், இதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கும் நன்மை அளிக்கின்றன. குறிப்பாக சரும பராமரிப்பில் உருளைக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

சூரிய ஒளியால் கருமை அடையும் சருமத்தை பளிச்சென மாற்றுவதற்கும், முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றுவதற்கும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி, சூரிய ஒளியால் சேதமடைந்த செல்களை குணப்படுத்துகிறது. இறந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்குகிறது. சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்கிறது.

இதில் உள்ள ‘கேடகோலேஸ்’ என்ற நொதி கரும்புள்ளிகளை நீக்குகிறது.

உருளைக்கிழங்கை பயன்படுத்தும் முறைகள்:

உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறினை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்திப் பஞ்சு அல்லது துணியை அந்த சாற்றில் நனைத்து, முகம் முழுவதும் தடவவும். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் கருமை நீங்கி முகம் பொலிவாகும்.

உருளைக்கிழங்கைக் கொண்டு பேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவதால் சருமம் பளிச்சிடுவது மட்டுமில்லாமல், அதில் இருக்கும் ஆன்டிஆக்சி டண்டுகள் முகத்தில் முதுமையான தோற்றத்தை மாற்றி, இளமைப் பொலிவைத் தருகின்றன.

பாதி அளவு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள நீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் படிந்து இருக்கும் இறந்த செல்கள் நீங்கி மிருதுவாகும். இ

பாதி அளவு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் பால் கலந்து முகத்தில் பூசவும். 10 நிமிடம் கழித்து, முகத்தை மென்மையாக மேல்நோக்கிய வட்டவடிவில் தேய்க்கவும். பின்னர் மிதமான சூடுள்ள நீரில் முகத்தைக் கழுவவும். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்கள் முகத்தின் அழகைக் குறைக்கும். இதற்கு உருளைக்கிழங்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

உருளைக்கிழங்கை இரண்டு வட்டவடிவ வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும். அவற்றின் மீது கற்றாழை ஜெல்லைத் தடவவும். இதனை கண்களின் மீது வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து உருளைக்கிழங்கை எடுத்துவிட்டு முகத்தைக் கழுவவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் கருவளையம் நீங்கி கண்கள் பளிச்சிடும்.

½ டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு, ¼ டீஸ்பூன் தக்காளிச் சாறு, ½ டீஸ்பூன் தேன் இவற்றை நன்றாகக் கலந்து முகப்பரு தழும்புகளின் மீது தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முகப்பரு தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்.

#Beauty #LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
AR Rahman daughters Khatija and Raheema break silence amid backlash over his comments on communal bias in Bollywood
சினிமாபொழுதுபோக்கு

இது விமர்சனம் அல்ல, வெறுப்புப் பேச்சு: தந்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தாக்குதலுக்கு மகள் கதிஜா கடும் கண்டனம்!

பாலிவுட் திரையுலகம் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை...

b7a0e11f70359614cdb0c81076f95148
பொழுதுபோக்குசினிமா

பிக்பாஸ் 9 மகுடம் சூடினார் திவ்யா கணேஷ்: இறுதிப் போட்டியாளர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, சின்னத்திரை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 100 நாட்களைக் கடந்து...

jana nayagan 2026 01 2f40377ceb923247b0e1214ea68a8163
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாளை (20) உயர் நீதிமன்றம் முக்கிய முடிவு!

நடிகர் விஜய் திரையுலகிலிருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’...

w 1280h 720format jpgimgid 01kf01j1s9q1j3njax8r4vcd0eimgname thalaivar thambi thalaimaiyil 1 1768454424361
சினிமாபொழுதுபோக்கு

தலைவர் தம்பி தலைமையில்: வசூலில் சாதனை, விமர்சனத்தில் சர்ச்சை – நடிகர் ஜீவாவுக்கு எதிராகத் திரளும் நெட்டிசன்கள்!

நடிகர் ஜீவா நடிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் வணிக ரீதியாக நல்ல...