1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

Share

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது.

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் எடுத்தது. இந்நிலையில் இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 60 ஓவர்களுக்கு பிறகு பந்தை மாற்ற வேண்டிய சூழல் வந்தது.

அதனால் இந்திய வீரர்கள் பும்ரா, கில், ரிஷப் பண்ட், சிராஜ் ஆகியோர் பந்து மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதனை சோதித்து பார்த்த நடுவர்கள் பந்து சரியாக உள்ளதாக தெரிவித்து வேறு பந்தை அனுமதிக்கவில்லை.

மற்ற வீரர்களை விட ரிஷப் பண்ட் கேட்டபோது நடுவர் முடியாது என்றதால், கோவமான பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்தார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

26 69688a1bca6b6
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் பட விவகாரம்: சென்சார் போர்டின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் நிலவி வந்த சட்டச் சிக்கல்கள்...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...