ஜெயிலர் 2 படத்திற்காக இயக்குனர் நெல்சன் வாங்கியுள்ள சம்பளம்
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக ஜெயிலர் அமைந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவின் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்தது. உலகளவில் ரூ. 625 கோடிக்கும் மேல் ஜெயிலர் படம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். விரைவில் ஜெயிலர் 2 விற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ஜெயிலர் 2 படத்திற்காக இயக்குனர் நெல்சன் திலிப்குமார் வாங்கவுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை இயக்க ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கவுள்ளாராம் நெல்சன். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளரான பிஸ்மி கூறியுள்ளார்.
Comments are closed.