24 66266a95a7965
சினிமாபொழுதுபோக்கு

உச்சகட்ட போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கும் முருகதாஸின் அடுத்த படம்!

Share

உச்சகட்ட போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கும் முருகதாஸின் அடுத்த படம்!

இயக்குனர் முருகதாஸ் சில காலம் எந்த படமும் இயக்காமல் ஓய்வில் இருந்த நிலையில் மீண்டும் பிஸியான இயக்குனராக மாறி இருக்கிறார்.

அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வரும் நிலையில், அடுத்து ஹிந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

சல்மான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் எங்கே இருக்கிறார், ஷூட்டிங் எங்கே நடக்கிறது, எத்தனை மணிக்கு வருவார் என எல்லா தகவல்களும் ரகசியமாக வைக்கப்படுகின்றது.

அடுத்த மாதம் சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தையும் பத்து நாட்களுக்கு முன்பு இருந்தே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பை அளிக்க இருக்கிறதாம் போலீஸ்.

இதனால் உச்சகட்ட பாதுகாப்புடன் தான் முருகதாஸ் அவரது அடுத்த படத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Share
தொடர்புடையது
Untitled 17
பொழுதுபோக்குசினிமா

பிரபாஸின் ‘பௌஜி’ படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான ‘பௌஜி’...

world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...