pachai karpooram2
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

10 நிமிடத்தில் பளபளன்னு பளிச்சிடும் சருமத்தைப் பெற பச்சை கற்பூரம்

Share

முகத்தில் கருந்திட்டுக்கள், முகப்பருக்கள், கொப்பளங்கள் உட்பட முகத்தில் இருக்கக்கூடிய சரும பிரச்சனைகளை சரி செய்ய பச்சை கற்பூரம் நன்றாக வேலை செய்யும்.

சாதாரணமாக இறைவனுக்கு ஏற்றக்கூடிய சூடம் அழகு குறிப்புக்கு பயன்படுத்தக் கூடாது. பச்சை கற்பூரம் என்று கடைகளில் தனியாக விற்கின்றது. அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பச்சை கற்பூரத்தை லட்டு செய்யும்போது கூட அதில் கொஞ்சம் மனத்திற்காக சேர்பார்கள்.

அந்த பச்சை கற்பூரம் தான் இந்த அழகு குறிப்பில் பயன்படுத்த வேண்டும். சாதாரண சூடத்தை தவறியும் பயன்படுத்தக்கூடாது.

முதலில் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை எடுத்து கையாலேயே நுணுக்கி நன்றாக தூள் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று சிட்டிகை பச்சை கற்பூரத்தை மட்டும் தான் நாம் பயன்படுத்த போகின்றோம். அந்த அளவிற்கு பச்சை கற்பூரம் எடுத்தால் போதும். நிறைய பச்சை கற்பூரத்தை சேர்க்கக்கூடாது.

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, பச்சை கற்பூரத்தூள் 2 சிட்டிகை, தேன் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் தேவையான அளவு ஊற்றி இதை ஃபேஸ் பேக்காக கலந்து அப்படியே முகத்தில் போட்டுக் கொள்ளலாம். 10 நிமிடங்கள் கழித்து பேக் நன்றாக காய்ந்த பின்பு லேசாக தண்ணீரைத் தொட்டு மசாஜ் செய்து முகத்தை கழுவினால் உடனடியாக முகம் பளிச்சென்று மாறியிருக்கும்.

முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை ஒரு சில நாட்களில் படிப்படியாக குறையும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்துங்கள். முகத்தில் இருக்கக்கூடிய தழும்புகள் முகப்பருக்கள் நன்றாக குறைந்த பின்பு பேக்கை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். அதாவது வாரத்தில் இரண்டு நாள் என்ற கணக்கில், ஒரு மாதம் வரை பேக்கை பயன்படுத்திவிட்டு நிறுத்தி விடுங்கள். அதன் பின்பு தேவைப்படும்போது இந்த பேக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்

பச்சைக் கற்பூரம் சருமத்துக்கு பயன்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அதை சருமத்தில் அதிகப்படியாக போடும்போது, ஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு ரொம்ப ரொம்ப சென்சிடிவ் ஸ்கின்னாக இருந்தால் இரண்டு சிட்டிகைக்கும் குறைவாக, ஒரு சிட்டிகை பச்சை கற்பூர பொடியை குறிப்பில் பயன்படுத்தி பாருங்கள். உங்களுடைய ஸ்கின் சென்சிடிவ் ஸ்கின் எனும் பட்சத்தில் இதை பேட்ச் டெஸ்ட் செய்து விட்டு முகத்தில் அப்ளை செய்வது மிகவும் சிறப்பானது. உங்களுடைய முகத்தில் ஓபன் போஸ் இருந்தால் இந்த குறிப்பை நீங்கள் பயன்படுத்தாதீர்கள்.

உங்களுக்கு ரொம்பவும் ஆயில் ஸ்கின்னாக இருந்தால் கடலை மாவுக்கு பதிலாக முல்தானி மெட்டியை சேர்த்து இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ரோஸ் வாட்டர் உங்கள் வீட்டில் இல்லை என்றால், அரிசி கலைந்த தண்ணீர் அல்லது அரிசி வடித்த கஞ்சியை கொண்டும் இந்த பேக்கை கலந்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. தீர்க்க முடியாத சரும பிரச்சனைகளை கூட இந்த ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் தீர்த்து வைக்கும்.

#Beauty

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
screenshot13541 down 1713541699
சினிமாபொழுதுபோக்கு

கடந்த வருடம் வெளியாகி பெரிய ஹிட் ஆன மலையாள படம் மஞ்சுமெல் பாய்ஸ்.

இந்த படம் கேரளாவை தாண்டி தமிழில் தான் பெரிய ஹிட் ஆனது. அதற்கு காரணம் படம்...

images 7
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ முதல் தனுஷின் ‘D55’ வரை: பூஜா ஹெக்டேவின் அடுத்தடுத்த தமிழ்ப் படங்கள்!

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ்த் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தளபதி விஜய்யின்...

images 5
சினிமாபொழுதுபோக்கு

மணிரத்னம் படத்தில் நடிக்கக் கையை வெட்டவும் தயார்: நடிகை பிரியாமணி உருக்கமான கருத்து! 

பிரபல நடிகை பிரியாமணி, இயக்குநர் மணிரத்னம் அவர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதற்காகத் தனது...

4a0863b31f2176412487ed4e6877a71517618271634881270 original
சினிமாபொழுதுபோக்கு

சியான் 63: விக்ரமின் அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்குகிறார்!

எப்போதும் சவாலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் விக்ரமின் (சியான்) அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ...