இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக (Drop) வெளியான தகவல்களுக்குப் பாலிவுட் நடிகர் அமீர்கான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். லோகேஷ் உடனான படம் இன்னும் உயிருடன் தான் இருக்கிறது என்று அவர் புதிய தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ (Coolie) திரைப்படத்தில் அமீர்கான் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதும், படத்தைப் பார்த்த பின் நெட்டிசன்கள் அமீர்கானின் பாத்திரத்தை விமர்சனம் (Troll) செய்தனர். இப்படி ஒரு ரோலில் அவர் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டார் எனவும் பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.
‘கூலி’ படத்திற்குப் பிறகு லோகேஷ் உடன் அமீர்கான் ஒரு தனிப் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்தப் படம் ட்ராப் ஆனதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில், அமீர்கான் தற்போது அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறியுள்ளார்:
“லோகேஷ் உடன் சந்திப்பு இந்நேரம் நடந்திருக்க வேண்டும். அவர் கூடிய விரைவில் மும்பைக்கு வந்து கதை சொல்வதாகக் கூறியிருக்கிறார். அதனால் படம் தற்போது உயிருடன் தான் இருக்கிறது, ட்ராப் எல்லாம் ஆகவில்லை,” என அமீர்கான் தெரிவித்து இருக்கிறார்.
மறுபுறம், லோகேஷ் கனகராஜ் தற்போது தான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிப்பதற்காகச் சென்றுவிட்டார். அடுத்து அவர் ‘கைதி இரண்டாம் பாகம்’ இயக்கப் போகிறார் என்னும் தகவல் கூட வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.