28 1
சினிமாபொழுதுபோக்கு

அது போன்று யாரும் நடிக்க மாட்டார்கள்.. இளம் நடிகை குறித்து துல்கர் சல்மான் கூறிய அதிரடி தகவல்

Share

அது போன்று யாரும் நடிக்க மாட்டார்கள்.. இளம் நடிகை குறித்து துல்கர் சல்மான் கூறிய அதிரடி தகவல்

மலையாள சினிமா மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான். பிரபல மூத்த நடிகர் மம்முட்டியின் மகனான இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழில் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓகே கண்மணி, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் நடிப்பில் தீபாவளி பண்டிகை அன்று வெளிவந்த படம் தான் லக்கி பாஸ்கர்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த மீனாட்சி சவுத்ரி குறித்து துல்கர் சல்மான் பாராட்டி பேசியுள்ளார். அதில், ” சுமதி வேடத்தில் இவரை தவிர வேறு எந்த இளம் கதாநாயகிகளும் ஏற்று நடித்திருக்க மாட்டார்கள்.

ஆனால் மீனாட்சி அந்த சுமதி வேடத்தை மிகவும் அழகாக நடித்திருந்தார். இந்த பாத்திரம் அதிக நேரம் திரையில் வரக்கூடிய பெரிய பாத்திரம். அதை அவர் முழு மனதுடன் ஏற்று நடித்துள்ளார்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...