தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷா கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனக்கு அறிகுறிகள் இருந்தன.
தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நான் குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அதற்காக தடுப்பூசிக்கு நன்றி கூறுகிறேன்.
விரைவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கையுள்ளது. நான் நலம்பெற வேண்டும் என பிரார்த்தித்த நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
#CinemaNews
Leave a comment