24 661da6fc929fb
சினிமாசெய்திகள்

என் படம் வரக்கூடாதுனு சொல்ல நீ யாரு.. ரெட் ஜெயண்ட் பற்றி கோபமாக பேசிய நடிகர் விஷால்

Share

என் படம் வரக்கூடாதுனு சொல்ல நீ யாரு.. ரெட் ஜெயண்ட் பற்றி கோபமாக பேசிய நடிகர் விஷால்

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். தானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என விஷால் சமீபத்தில் அறிவித்து இருந்தார். 2026 தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

அடுத்து அவர் நடிப்பில் ரத்னம் என்ற படம் திரைக்கு வருகிறது. ஹரி இயக்கி இருக்கும் அந்த படத்தின் ட்ரைலரும் நேற்று வெளியாகி இருந்தது.

நடிகர் விஷால் தற்போது அளித்த பேட்டியில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் பற்றி கோபமாக பேசி இருக்கிறார்.

“ஒரு படத்தை தள்ளிப்போ என சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. சினிமா என் கையில் இருக்கு என சொன்னவர்கள் யாரும் உருபட்டதாக சரித்திரம் கிடையாது.”

“என் தயாரிப்பாளர் வட்டி கட்டி கொண்டிருக்கிறார். நீங்க ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு, அந்த படம் வரக்கூடாது என சொல்றீங்க. யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. நீங்க தான் தமிழ் சினிமாவை குத்தகைக்கு எடுத்தீருக்கீங்களா என நான் கேட்டேன்”

“65 கோடி செலவு செய்திருக்கிறார் மார்க் ஆண்டனி தயாரிப்பாளர். செப்டம்பர் 15 ரிலீஸ் என ஒன்றரை மாதத்திற்கு முன்பே அறிவித்துவிட்டார். வேறு தேதியில் ரிலீஸ் செய்ய சொல்ல நீ யார்.”

“நீயும் ரிலீஸ் பண்ணு, நானும் ரிலீஸ் பண்றேன், மக்கள் முடிவு பண்ணட்டும் எந்த படத்தை பார்க்க வேண்டும் என்று. நீங்க மட்டும் தான் ரிலீஸ் பண்ணி சம்பாதிக்க வேண்டும் என ரூல் இருக்கிறதா” என விஷால் ஆவேசமாக கேட்டிருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 151
செய்திகள்உலகம்

AI-ஐ மனைவியாகக் கருதி காதல்: அமெரிக்காவில் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஜொனாதன் கவாலாஸ் (Jonathan Gavalas, 36) என்ற நபர், செயற்கை...

world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...