சினிமாசெய்திகள்

என் படம் வரக்கூடாதுனு சொல்ல நீ யாரு.. ரெட் ஜெயண்ட் பற்றி கோபமாக பேசிய நடிகர் விஷால்

Share
24 661da6fc929fb
Share

என் படம் வரக்கூடாதுனு சொல்ல நீ யாரு.. ரெட் ஜெயண்ட் பற்றி கோபமாக பேசிய நடிகர் விஷால்

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். தானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என விஷால் சமீபத்தில் அறிவித்து இருந்தார். 2026 தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

அடுத்து அவர் நடிப்பில் ரத்னம் என்ற படம் திரைக்கு வருகிறது. ஹரி இயக்கி இருக்கும் அந்த படத்தின் ட்ரைலரும் நேற்று வெளியாகி இருந்தது.

நடிகர் விஷால் தற்போது அளித்த பேட்டியில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் பற்றி கோபமாக பேசி இருக்கிறார்.

“ஒரு படத்தை தள்ளிப்போ என சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. சினிமா என் கையில் இருக்கு என சொன்னவர்கள் யாரும் உருபட்டதாக சரித்திரம் கிடையாது.”

“என் தயாரிப்பாளர் வட்டி கட்டி கொண்டிருக்கிறார். நீங்க ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு, அந்த படம் வரக்கூடாது என சொல்றீங்க. யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. நீங்க தான் தமிழ் சினிமாவை குத்தகைக்கு எடுத்தீருக்கீங்களா என நான் கேட்டேன்”

“65 கோடி செலவு செய்திருக்கிறார் மார்க் ஆண்டனி தயாரிப்பாளர். செப்டம்பர் 15 ரிலீஸ் என ஒன்றரை மாதத்திற்கு முன்பே அறிவித்துவிட்டார். வேறு தேதியில் ரிலீஸ் செய்ய சொல்ல நீ யார்.”

“நீயும் ரிலீஸ் பண்ணு, நானும் ரிலீஸ் பண்றேன், மக்கள் முடிவு பண்ணட்டும் எந்த படத்தை பார்க்க வேண்டும் என்று. நீங்க மட்டும் தான் ரிலீஸ் பண்ணி சம்பாதிக்க வேண்டும் என ரூல் இருக்கிறதா” என விஷால் ஆவேசமாக கேட்டிருக்கிறார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...