l21720230608120836
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் படம் குறித்து விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு.. கடும் வருத்தத்தில் ரசிகர்கள்

Share

நடிகர் விஜய் தற்போது அரசியலில் முழுமையாக இறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்துவிட்டார்.

இதன்பின் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே என விஜய் எடுத்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்தது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், இன்னும் பேட்ச் ஒர்க் மட்டுமே மீதமுள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படம் குறித்து விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் எப்போதும் அவருடைய படத்தை பற்றிய ஏதாவது அறிவிப்பு வெளிவரும். அதற்காக விஜய்யின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

ஆனால், வருகிற ஜூன் 22ம் தேதி தனது பிறந்தநாள் அன்று, தனது படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவர கூடாது என விஜய் முடிவு செய்துள்ளாராம். மேலும் படப்பிடிப்பின் இறுதி நாளில் எடுத்த புகைப்படங்கள் கூட இப்போது வெளிவரக்கூடாது என படக்குழுவிடம் கூறிவிட்டாராம்.

படத்தின் ரிலீஸுக்கு ஒரு மாதத்திற்கு முன் அப்டேட் ஒவ்வொன்றாக வெளிவந்தால் போதும் என விஜய் முடிவு செய்துள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

காரணம், தனது ரசிகர்களும் தொண்டர்களும் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் கவனம் திசைமாறக்கூடாது என்பதற்காகவும் இந்த முடிவை விஜய் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...