35 6
சினிமா

நான் ராஜாவாக இருந்தால் அவரை கடத்தி என் அரண்மனையில்.. விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்

Share

தெலுங்கில் ரவி பாபு இயக்கிய நுவ்விலா படத்தில் நடிக்க அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. துணை நடிகராக இருந்த இவர் கடந்த 2016ம் ஆண்டு பெல்லி சூப்புலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இப்படத்தின் வெற்றியடைய அடுத்து விஜய் தேவரகொண்டா நடித்த படம் தான் அர்ஜுன் ரெட்டி, படம் பிரம்மாண்ட வெற்றியடைய தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக்கும் ஆனது.

பின் இவர் நடித்த மகாநதி, கீதா கோவிந்தம், டாக்வி வாலா, குஷி என அடுத்தடுத்த படங்கள் ஹிட் அடிக்க ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தற்போது ‘கிங்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்த இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அனிருத் குறித்து விஜய் தேவரகொண்டா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “விஐபி மற்றும் 3 போன்ற படங்களைப் பார்த்தபோது, அனிருத் மீது எனக்கு அன்பு உருவானது.

யார் இந்த மேதை? அவர் சாதாரணமான ஒருவர் இல்லை என தோன்றியது. அப்போது, நான் நடிகராகவில்லை. ஆனால், நான் எப்போதாவது ஒரு நடிகராக மாறினால், என் படங்களுக்கு இவர் தான் இசையமைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

நான் ஒரு ராஜாவா இருந்திருந்தால், அனிருத்தை கடத்தி வந்து அரண்மனையில் வைத்து என் படங்களுக்கு மட்டும் இசையமைக்க செய்திருப்பேன். அனிருத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல வருடங்களாக காத்திருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...