சினிமாசெய்திகள்

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிதியுதவி! கனடா, ஸ்வீடன் எடுத்துள்ள முக்கிய முடிவு

Share
tamilni 182 scaled
Share

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிதியுதவி! கனடா, ஸ்வீடன் எடுத்துள்ள முக்கிய முடிவு

ஸ்வீடன் மற்றும் கனடா பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவன நிதியுதவியை மீண்டும் தொடங்கியுள்ளன.

ஸ்வீடன்(Sweden) மற்றும் கனடா(Canada) ஆகிய நாடுகள், பாலஸ்தீன அகதிகளுக்கு(Palestinian refugees) ஆதரவளிக்கும் ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலைகள் நிறுவனத்திற்கு (UNRWA) மீண்டும் நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளன.

2024 ஜனவரி இறுதியில் இஸ்ரேல்(israel), ஹமாஸ்(Hamas) தாக்குதலில் UNRWA ஊழியர்கள் ஈடுபட்டதாகக் கூறிய பின்னர், 14 நாடுகளுடன் சேர்ந்து கனடா மற்றும் ஸ்வீடன் ஆகிய இந்த இரு நாடுகளும் நிதியுதவியை நிறுத்தி வைத்தன.

ஐக்கிய நாடுகள் தற்போது இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது, மேலும் பிரான்ஸ் சுயாதீன விசாரணையை நடத்தி வருகிறது.

இந்நிலையில் செலவினங்கள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பை அதிகரிப்பதற்கான உத்தரவாதங்களை UNRWA வழங்கிய பின்னர், ஸ்வீடன் இன்று 200 மில்லியன் kronor (அதாவது 19 மில்லியன் டாலர்கள்) ஆரம்ப நிதியுதவியை அறிவித்துள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில் ஐரோப்பிய கமிஷன் €50 மில்லியன் (54.7 மில்லியன் டாலர்) நிதியை வெளியிடுவதற்கான முடிவைத் தொடர்ந்து ஸ்வீடன் நிதியுதவியை மீண்டும் தொடங்கியது.

இந்த முடிவுகளை தொடர்ந்து, காசாவில் உள்ள அவசர மனிதாநேய தேவைகளை காரணமாகக் காட்டி கனடாவும் நிதியுதவியை மீண்டும் தொடங்கியுள்ளது.

குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடரும் நிலையில், ஸ்வீடன் மற்றும் கனடாவின் முடிவுகள் மாற்றத்தைக் குறிக்கின்றன, மேலும் பாலஸ்தீன அகதிகளுக்கு ஆதரவளிப்பதில் UNRWA வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்கின்றன.

பாலஸ்தீன அகதிகளுக்கு சுகாதாரம், கல்வி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் முதன்மை நிறுவனம் UNRWA ஆகும்.

காசாவில் மட்டும் சுமார் 13,000 பேரை இந்த நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. நிதியுதவி நிறுத்தப்பட்ட பிறகு, நிறுவனம் உதவி வழங்குவதில் சிக்கல் எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...