6 13
சினிமாசெய்திகள்

முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்.. சபாஷ் சரியான போட்டி

Share

முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்.. சபாஷ் சரியான போட்டி

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் இட்லி கடை திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இட்லி கடை திரைப்படம் வெளிவரவிருக்கும் அதே நாளில் சூர்யா 44வது படமும் வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றனர். கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூர்யா 44. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காத நிலையில் சூர்யாவின் 44வது என்பதால் அப்படியே அழைக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2025 ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல் கூறுகின்றனர்.

இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி தனுஷின் இட்லி கடை மற்றும் சூர்யாவின் 44வது படமும் வெளிவரவுள்ளது.

 

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...