சாதிக்கு எதிராக குரல் கொடுத்த தெருக்குரல் அறிவு
சினிமாசெய்திகள்

சாதிக்கு எதிராக குரல் கொடுத்த தெருக்குரல் அறிவு

Share

சாதிக்கு எதிராக குரல் கொடுத்த தெருக்குரல் அறிவு

தமிழகத்தில் உள்ள நாங்குநேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டிய சம்பவத்திற்கு பாடகர் தெருக்குரல் அறிவு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவனை வீடு புகுந்து தாக்கிய சக மாணவர்கள்
தமிழகத்தில் உள்ள நாங்குநேரியில் சாதி விரோதம் காரணமாக பிளஸ் 2 படிக்கும் சின்னத்துரை (17) என்ற மாணவனை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டியுள்ளனர்.

அதனை தடுக்க சென்ற அவரது தங்கையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது தாத்தா மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதில், படுகாயம் அடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தெருக்குரல் அறிவு தனது பதிவில்,”சாதியற்ற வருங்காலத்தை உருவாக்க, physics chemistry maths எல்லாத்தையும் போல, வகுப்பறைகளில் சாதியத்தின் சமூக விளைவை பாடமா சொல்லிக்கொடுங்க!

Anti-Caste மனநிலை மாணவப்பருவத்திலேயே எல்லாருக்கும் கற்பிக்கப்படனும். இடஒதுக்கீடு ஒரு இலவசம் , ஆண்ட பெருமைகள் , சாதி அடையாள கயிறுகள், குறியீடுகள் போன்ற தவறான புரிதல்களை அரும்பிலேயே கிள்ளி எறிவது தான் சமகால கல்வியின் பிரதான நோக்கமா இருக்கணும்.

சாதிய வன்கொடுமைகளில் யாருடைய ரத்தம் காலகாலமாக சிந்திக்கிடக்கிறது என விவாதிக்காமல் , எல்லா ரத்தமும் சிவப்பு என்றும் சாதியை ஒரு ஆபத்தில்லாத பண்பாட்டு வடிவம் என்றும், இருந்தும் இல்லாத ஒன்று என கடந்து போவதும் மேலும் ஆபத்தை வருவிக்கும்!

சக மாணவன் படிப்பதையும் சுயமுன்னேற்றம் அடைவதையும் கூட ஏற்க முடியாத மனநோயின் வேரை கண்டறிந்து வீழ்த்தாமல், தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் பட்டியலினத்தவர் மீதான வெறுப்பு மனநிலையை மாற்றாது” எனக் கூறியுள்ளார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...

25 67a81aa32df3b
செய்திகள்இலங்கை

பாடப்புத்தக அச்சிடும் பணி நிறுத்தப்படவில்லை – கல்வி அமைச்சு விளக்கம்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில...

20250908031349
செய்திகள்இலங்கை

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்பு செலவு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறையீடு!

பாதாள உலகத் தலைவரான நதுன் சிந்தக, ‘ஹரக் கட்டா’ என்றும் அழைக்கப்படுபவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...