29
சினிமாசெய்திகள்

கூட்டம் கூடுறதெல்லாம் ஒரு விஷயமா.. புஷ்பா 2 பற்றி நடிகர் சித்தார்த் விமர்சனம்

Share

கூட்டம் கூடுறதெல்லாம் ஒரு விஷயமா.. புஷ்பா 2 பற்றி நடிகர் சித்தார்த் விமர்சனம்

நடிகர் சித்தார்த் சமீபகாலமாக பேட்டிகளில் பேசும் விஷயங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன. சமீப காலமாக உங்களுக்கு பெரிய அளவில் வெற்றி படம் இல்லையே என ஒருவர் கேட்டதற்கு “இந்தியன் 2 உங்களுக்கு படமாக தெரியவில்லையா. நான் ஜெயித்துக்கொண்டு தான் இருக்கிறேன்” என சித்தார்த் அதிரடியாக பதில் அளித்து இருந்தார்.

அந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

இந்நிலையில் மற்றொரு பேட்டியில் சித்தார்த் அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா 2 பற்றி பேசி இருக்கிறார். பாட்னாவில் அல்லு அர்ஜுனை பார்க்க கூடிய கூட்டம் பெரிய அளவில் இருந்ததே என தொகுப்பாளர் கேட்டதற்கு, ‘கூட்டம் கூடுவதெல்லாம் ஒரு விஷயமா. அதுவும் இந்தியாவில். JCBயை கொண்டு வந்து நிறுத்தினால் கூட கூட்டம் கூடும்’.

“பீகாரில் கூட்டம் கூடுவது அவ்ளோ பெரிய விஷயம் இல்லை. இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும் qualityக்கும் சம்பந்தம் இல்லை. அப்படி பார்த்தால் எல்லா அரசியல் கட்சியும் ஜெயித்துக்கொண்டே இருக்க வேண்டுமே. எல்லாருக்கும் கூட்டம் கூடுகிறது. பிரியாணி, குவாட்டர் பாட்டில் என அதை சொல்வார்கள்” என சித்தார்த் பேசி இருக்கிறார்.

இதற்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தற்போது சித்தார்த்துக்கு ட்விட்டரில் கோபமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...