11 3
சினிமாசெய்திகள்

தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என முன்னாள் மேனேஜர் புகார்.. நடிகை அதிரடியாக வெளியிட்ட அறிக்கை

Share

தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என முன்னாள் மேனேஜர் புகார்.. நடிகை அதிரடியாக வெளியிட்ட அறிக்கை

நடிகை தன்ஷிகா தமிழில் பேராண்மை, பரதேசி, கபாலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். அவர் தெலுங்கிலும் தற்போது நடித்து வருகிறார்.

தன்ஷிகா பற்றி அவரது முன்னாள் மேனேஜர் பிரியா என்பவர் தற்போது ட்விட்டரில் புகார் ஒன்றை கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தன்ஷிகா மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் மனைவி கீர்த்தி அனுஷா ஆகியோர் பணம், சொத்து இருப்பவர்களை குறிவைத்து பின்தொடர்ந்து மிரட்டுகிறார்கள் என பிரியா நடிகை சாய் தன்ஷிகா பற்றி புகார் கூறி உள்ளார்.

பிரியாவின் பெற்றோரை மிரட்டி வருவதால் தான் தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என பிரியா ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு நடிகை தன்ஷிகா விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 2019ல் தான் பிரியாவை நீக்கிவிட்டதாகவும், அவர் சொல்லும் நபர்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது என தெரிவித்து உள்ளார்.

இதே போல அவர் தொடர்ந்து பதிவிட்டால் சட்டப்படி சந்திப்பேன் என தன்ஷிகா எச்சரிக்கையும் விடுத்து இருக்கிறார்.

Share
தொடர்புடையது
30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...

28 11
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டமைக்காக காரணம் வெளியானது!

பிரித்தானியாவின் ஆடை உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட், கட்டுநாயக்கவில் இயங்கி வந்த தமது தொழிற்சாலையை, திடீரென மூடியமைக்கான...

27 11
இலங்கைசெய்திகள்

மகிந்த – கோட்டாபய சகாக்களுடன் அநுர தரப்பு பேச்சுவார்த்தை

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் ஒன்றிணைந்து செயற்பட்டவர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுடன்...