11 3
சினிமாசெய்திகள்

தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என முன்னாள் மேனேஜர் புகார்.. நடிகை அதிரடியாக வெளியிட்ட அறிக்கை

Share

தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என முன்னாள் மேனேஜர் புகார்.. நடிகை அதிரடியாக வெளியிட்ட அறிக்கை

நடிகை தன்ஷிகா தமிழில் பேராண்மை, பரதேசி, கபாலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். அவர் தெலுங்கிலும் தற்போது நடித்து வருகிறார்.

தன்ஷிகா பற்றி அவரது முன்னாள் மேனேஜர் பிரியா என்பவர் தற்போது ட்விட்டரில் புகார் ஒன்றை கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தன்ஷிகா மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் மனைவி கீர்த்தி அனுஷா ஆகியோர் பணம், சொத்து இருப்பவர்களை குறிவைத்து பின்தொடர்ந்து மிரட்டுகிறார்கள் என பிரியா நடிகை சாய் தன்ஷிகா பற்றி புகார் கூறி உள்ளார்.

பிரியாவின் பெற்றோரை மிரட்டி வருவதால் தான் தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என பிரியா ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு நடிகை தன்ஷிகா விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 2019ல் தான் பிரியாவை நீக்கிவிட்டதாகவும், அவர் சொல்லும் நபர்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது என தெரிவித்து உள்ளார்.

இதே போல அவர் தொடர்ந்து பதிவிட்டால் சட்டப்படி சந்திப்பேன் என தன்ஷிகா எச்சரிக்கையும் விடுத்து இருக்கிறார்.

Share
தொடர்புடையது
19 14
செய்திகள்உலகம்

ஈரான் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளரான அலி லாரிஜானி (Ali Larijani) இஸ்ரேலியத் தாக்குதல்...

18 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி விசேட உரை: இன்று இரவு நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகிறார்!

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து...

17 16
செய்திகள்இந்தியா

விஜய் குறித்து விமர்சனம்: தவெக நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் மீது ஜூலி பரபரப்பு புகார்!

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜூலி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர்...

16 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதன்கிழமைகளில் பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்: அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய மின்சக்தி மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு புதன்கிழமையும்...